5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறு ஒக்டோபரில்

653 0

grade_five_8நேற்று இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் டப்ளிவ்.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்காக 3 லட்சத்து 50 ஆயிரத்து 701 பரீட்சார்திகள் தோற்றியிருந்தனர்.
இந்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 959 மத்திய நிலையங்களில் இடம்பெற்றன.
இந்தநிலையில், சகல விடைத்தாள்களையும் கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.