ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

296 0

iraq-shiite-isisஈராக்கில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைவதற்காக செல்லும் மேற்கு நாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை முன்னணி தொண்டர் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பெறும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக தமது பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்கின் மோசூல் மற்றும் சிரியாவின் ரக்வா ஆகிய நகரங்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக அமைப்பில் இணைபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முன்னணி தொண்டர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைபவர்களின் சரியான எண்ணிக்கையினை தற்போது கண்டறிய முடியாது இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.