நிதியமைச்சர் கவலை

257 0

ravi-karunanayake1அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் போதுமான அறிவு இல்லாதவர்கள் வெளியிடும் கருத்துக்களையிட்டு தாம் கவலையடைவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேயிலை சபையினால் வருமானமாக ஈட்டப்பட்ட நிதியானது நிதியமைச்சுக்கு பெறப்படுவது தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுடன் தமக்கு எந்த முரண்பாடும் இல்லையெனவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.