யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

288 0

jaffna-security-230515-seithy (1)யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மானிப்பாய் பகுதியில் காவல்துறையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தமிழ் பேசும் காவல்துறையினர் அதிகளவில்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கவால்துறை உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.