பந்துல தொடர்பிலான கருத்துக்கள்

321 0

bandulaதொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து பந்துல குணவர்த்தன விலகியிருக்காவிட்டாலும் விரைவில் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிதிச்செயலாளர் எஸ்.பீ திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்று, கட்சியுடன் இணைந்து திறம்பட செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையேல் அவர்கள் விலக்கப்படுவர் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பயனற்ற அமைப்பாளர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பந்துல குணவர்த்தன தாமாகவே அமைப்பாளர் பதவியிலிருந்து விலகியமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சிக்காக எந்தவித நற்செயற்பாடுகளையும் அவர் மேற்கொள்ளவில்லை என மகிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஹோமாக தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.