மஹிந்த அணியினர் இன்று தீர்மானம்

539 0

Ranjithஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறை நிகழ்வில் பங்குகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என மஹிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சந்திப்பொன்று இன்று மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அதன்போது இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காலமாக எமது தரப்பினர் பல்வேறு வழிகளிலும் பழிவாங்கள்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தநிலையில் ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதனை ஆராய்தே முடிவு எடுக்கப்படும் எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டார்.