ஜனாதிபதியின் உத்தரவை மீறி அனுராதபுரத்துக்கு மாற்றப்படும் வழக்குகள்!

311 0

ஜனாதிபதியின் உத்தரவை மீறி அரசியல் கைதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“மூன்று அரசியல் கைதிகள் ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அநுராதபுரத்துக்கு மாற்ற வேண்டாம் எனக் கோரியே அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நான் கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். கடிதத்தின் பிரகாரம, ஜனாதிபதியின் செயலளார் நீதி அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடித்தில், வவுனியா நீதிமன்ற வழக்குகளை அநுராதபுரத்துக்கு மாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால் இவ் வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

Leave a comment