விடுவிக்கபட்ட மீனவர்களின் படகு விபத்து – 1 பலி,1 படு காயம்

482 0

காரைநகர் கடற்பரப்பில் கடற்தொழிலாளர் படகும் கடற்படை படகும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததில் மேலும் ஒரு கடற்தொழிலாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்த சம்பத்தில் காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக கடற்தொழிலாளர் படகுகளை விடுவிக்கும்பொருட்டு தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்துவரும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க குறிப்பிட்டார்.

இந்த விபத்து இடம் பெற்றபோது படகில் இருந்தவரே மரணித்துள்ளதாகவும் கடலில் குதித்தவர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Leave a comment