எண்மானப் புரட்சியில் இணையாவிட்டால் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது- பிரதமர்

224 0

நாடு டிஜிட்டல் எனப்படும் எண்மானப் புரட்சியில் இணையாவிட்டால், பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் இலவச வைஃபை சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

உலகம் எண்மான புரட்சியின் விளிம்பில் உள்ளுது.

அதற்கு சமாந்தரமாக இலங்கையும் பயணிக்க வேண்டும்.

இலங்கையில் கைப்பேசி பாவனை மட்டம் அதிகரித்துள்ள நிலையில்,இணைய சேவைக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

இதற்கு ஏற்றாற்போல், 200க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச வைஃபை வசதிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment