இன்று அவசர நாடாளுமன்ற அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது

406 0

மாகாண சபை தேர்தல் தொடர்பான 3 சட்ட மூலங்களை திருத்தங்களுடன் நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடவுள்ளது.

பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை சட்டமூலங்கள் மூன்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இன்றைய அவசர அமர்வு இடம்பெறவுள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 7.30 வரையில் இந்த சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தி, நிறைவேற்றப்படவுள்ளன.

அதேநேரம், இலங்கை நாடாளுமன்றத்திற்கு 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு எதிர்வரும் 3ம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment