நுவரெலியாவில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, வீட்டின் கூரை மீது விழுந்து விபத்திற்குள்ளானது(காணொளி)

316 0

நுவரெலியாவில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, வீட்டின் கூரை மீது விழுந்த போதிலும், காயமடைந்த நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.

நுவரெலியா ஹட்டன் நகரத்திலிருந்து ஹட்டன் காமினிபுர பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி காமினிபுர பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதன் போது முச்சக்கரவண்டி சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்து இன்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்தவரும் தப்பியோடியுள்ளனர்.

அதன் பின்னர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதோடு, வீட்டிற்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment