யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆணின் சடலம்(காணொளி)

272 0

மன்னாரில், மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் இருந்து, ஆண் ஒருவருடைய சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அடையாளம் தெரியாத சடலம் காணப்படுவதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 50 வயதுடைய ஆண் ஒருவர் என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் எரிந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு சென்று மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டனர்.

மேலும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு சென்று விசாரனைகளை முன்னெடுத்தனர். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சடலத்தை பார்வையிட்டுள்ளார்.

Leave a comment