பகிடிவதை சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரல்

211 0

நில்வளா கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

கல்வியியல் கல்லூரியின் ஆணையாளர் கே.எம்.எச் பண்டாரவிற்கு அமைச்சரால் குறித்த அறிக்கையை தயாரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பகிடிவதை சம்பவமொன்று இடம்பெற்றிருந்தால் , அதனுடன் தொடர்புடைய தரப்பினருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment