அநாதரவாக இருந்த சிறுத்தை குட்டிகள் மீட்பு

209 0

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்ட பகுதியில் இரண்டு சிறுத்தை குட்டிகளை நோர்வூட் பொலிஸார் நேற்று (21) மீட்டுள்ளனர்.

கற்குகைக்குள் இருந்த சிறுத்தை குட்டிகளை கண்ட பிரதேசவாசிகள் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்த நிலையிலே இரண்டு சிறுத்தை குட்டிகளும் மீட்கப்பட்டன.

தாய் சிறுத்தையை இழந்த நிலையில் அநாதரவாக இருந்த சிறுத்தை குட்டிகளை மஸ்கெலியா நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment