அர்ஜுன் மஹேந்திரனிடம் இன்றும் வாக்குமூலம்

273 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று மூன்றாவது நாளாகவும் ஆஜராகியுள்ளார். 

இன்று காலை 10.00 மணியளவில் அவர் ஆணைக்குழுவிற்கு வந்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

அர்ஜுன மகேந்திரன் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவேண்டும் என்று அழைப்பாணை விடுக்கப்பட்டதன் பின்னர் கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இன்றைய தினமும் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் ஆஜராகியுள்ளார்.

Leave a comment