யோஷிதவின் டேசி பாட்டியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

290 0

சட்டவிரோதமான முறையில் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை நிர்மாணித்தது சம்பந்தமாக, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டேசி போரஸ்ட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க கொழும்பு முதன்மை நீதவான் லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

Leave a comment