மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரம் விரைவில் வழமைக்கு

279 0

சீரற்ற காலநிலை மற்றும் சில காரணங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தினை உடனடியாக வழமைக்கு கொண்டுவர விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மின்சாரம் தொடர்பிலான ஊழியர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக சில பிரதேசங்களில் இவ்வாறு மின்சார விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஒப்பந்த அடைப்படையிலான சேவையாளர்கள் மற்றும் தற்போது பணி புறக்கணிப்பில் ஈடுபடாதவர்கள் சேவையில் இணைக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தினை  விரைவில் வழமையான நிலைமைக்கு கொண்டுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment