பிரித்தானியாவின் ஊடகவியலாளர் இலங்கையில் முதலைத் தாக்கி உயிரிழந்தார்.

335 0

பிரித்தானியாவின் ஊடகவியலாளர் ஒருவர் இலங்கையின் அருகம்பே பகுதியில் முதலைத் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஃப்னன்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளரான 24 வயதான போல் மெக்லீன் என்பாரே இவ்வாறு உயிரிழந்தார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான அவர், தமது நண்பர்களுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்தார்.

இதன்போது அவர் அருகம்பேயில் உள்ள முதலைக்கல் என்ற பகுதியின் நீர்நிலையில் கைகளை கழுவ முற்பட்ட போது, முதலையால் நீருக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment