இராணுவத்தினரை காப்பாற்றசரத் பொன்சேகா, மனலநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதிப்படுத்த வேண்டும் – உதய கம்மன்பில

341 0

இராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும் எனில், சரத் பொன்சேகா, மனலநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து தப்பி வந்தார் என்று உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ தளபதியாக தாம் இருந்த காலப்பகுதியில் அதிகாரிகள் தப்புசெய்தார் என பொன்சேகா கூறுகிறார்.

இதனை உறுதிப்படுத்த சாட்சி அவசியமில்லை.

இந்தநிலையில் இராணுவத்தினரை காப்பாற்ற வேண்டும் எனில் சரத் பொன்சேகா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று உறுதிப்படுத்தினால் போதும்.

இவ்வாறு செய்தாலே இராணுவத்தினரை பாதுகாக்க முடியும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment