தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனி வீரச்சாவடைந்த பின் எடுக்கப்பட்ட காணொளி!

461 0

சமீபத்தில் பிரேசில் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை தூதுவரும், முன் நாள் தளபதியுமான ஜெகத் ஜெயசூரியா.

தான் போர் நடைபெற்றவேளையில் வன்னி கூட்டுபடைத் தளத்தில் இருந்ததாகவும். தான் முள்ளிவாய்க்காலில் இருக்கவில்லை என்றும் நேரடியாக TV ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விடயம் யாவரும் அறிந்ததே.

ஆனால் இந்த வீடியோவைப் பாருங்கள். இதில் முல்லைத்தீவு தற்காலிக முகாம் ஒன்றில் ஜெயசூரியா இருந்து திட்டங்களை தீட்டிவிட்டு. பின்னர் நேரடியாக களம் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி, ஒரு படைப் பிரிவை தலைமை தாங்கிச் சென்று பெரும் உடைப்பு ஒன்றுக்கு திட்டம் தீட்டினார்.

அதனூடாக அவர்கள் வெளியேற முற்பட்டார்கள். இருப்பினும் அவர்கள் வரும் திசையை முன்னரே அறிந்த ராணுவத்தினர் அவர்களுக்கு பெரும் பொறி ஒன்றை வைத்து அனைவரையும் சிக்கவைத்தார்கள்.

Leave a comment