பங்கு கொள்வனவு மேலும் ஒருவர் கைது

346 0

Namal-arrested-e1468259160911ஹெலோ கோப் என்ற நிறுவனத்தின் 125 மில்லியன் ரூபா பங்கினை சந்தேகத்திற்கிடமான முறையில் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கூறப்படும் ‘கவர்ஸ்’ கோபரேஷன் தனியார் நிறுவனம் மற்றும் ஹெலோ கோப் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை நிதி மோசடி தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.