இராணுவ தளபதியின் பதவி காலம் மேலும் நீடிப்பு

351 0

1_1_appoinment1இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் பதவி காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லெப்டினன் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இலங்கை இராணுவத்தின் 21வது தளபதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.