சீனி, உப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கு வரி –  சுகாதார அமைச்சர்   

329 0

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனி, உப்பு, எண்ணெய் போன்றவற்றுக்கு வரி விதிக்க வேண்டுமென்று  சுகாதார அமைச்சர்   ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2025ஆம் ஆண்டளவில் நோய்களை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தாதி பயிலுனர்கள் பயிற்சிக்காக சேவையில் நியமனம் பெறும் 888 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், நல்லாட்சி அரசாங்கத்தின் நிதிப் பயன்பாட்டை உரிய நிலைக்கு கொண்டுவர முடிந்திருப்பதாகவும் கூறியுள்ளார்

Leave a comment