இலங்கைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நியமன கடிதம் கையளிப்பு

240 0

இலங்கைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் தமது நியமன கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.

இந்த நிகழ்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

எஸ்டோனியா குடியரசு, பெரு குடியரசு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களே தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

சிறந்த நட்புறவுகளை பேணி வரும் நாடுகள் தமக்கிடையே உறுதியான நீண்ட கால இருதரப்பு உறவுகளை உறுதிசெய்வதற்கு பொருளாதார கூட்டுறவை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூதுவர்களிடம் தெரிவித்தார்.

நட்பு நாடுகளுடன் பலமான பொருளாதார உறவுகளை பேணுவதற்கு இலங்கை விரும்புகின்றது.

வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டுறவை மேலும் பலப்படுத்துவதற்கு புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Leave a comment