தனிப்பட்ட பிரச்சினைகளை இராணுவத்தின் மீது திணிக்க வேண்டாம்

278 0
தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை இராணுவத்தினரின் மீது திணிக்க வேண்டாம் என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு இராணுவத் தளபதிக்கு எதிராக பொது இடத்தில் வைத்து குற்றஞ்சுமத்தப்படுவதானாது முழு இராணுவத்தினர் மீதும் விதிக்கப்படும் அழுத்தங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த யுத்தக் காலத்தில் எந்தவொரு இராணுவத்தினரும் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தான் இராணுவத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட போது தான் இராணுவத்தினருக்கு எதிராக கதைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக கடமையாற்றிய போது தனக்கு நடந்த அநியாயங்கள் பற்றி தான் எதுவும் சொல்லவில்லை எனினும் அமைச்சர் பொன்சேகா இராணுவம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் இராணுவத்தினரை அகௌவரப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் களத்தில் 28,000 இராணுவத்தினர் கொல்லப்பட்டு, அங்கவீனமுற்றது இவ்வாறான கருத்துக்களை கேட்பதற்கா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய எந்தவொரு சந்தர்ப்பதிலும் மனித உரிமைகளை மீறவில்லை என்றும்,தாம் தற்போதும் சரத் பொன்சேகாவை மதிப்பதற்கான காரணம் அவர் இராணுவத்திற்கு செய்த உயர் சேவைக்காகவே அன்றி அவர் அமைச்சர் என்பதால் அல்லவென்றும் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment