பொன்சேகா மன்னிப்புக்கோர வேண்டும்-கருணா

231 0
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு அவர் முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவின் இந்தக் கருத்துக்கள் காரணமாக நாட்டிற்கும்,இராணுவத்தினருக்கும் பாரிய அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தகாலத்தில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபட்டதாகவும்,இது தொடர்பில் அவருக்கு எதிராக சாட்சியளிக்க தான் தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment