இந்திய மீனவர்கள் 80 பேர் கையளிப்பு

237 0

இந்தியாவைச் சேர்ந்த 80 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைதியனம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படட 76 மீன்வர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுடன், அனர்த்தத்துக்கு உள்ளான படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 4 இந்திய மீனவர்களுமாக 80 பேர் நேற்று இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a comment