வவுனியாவில் வாள்வெட்டு – வர்த்தகர் காயம்

236 0
வவுனியா குருமண்காடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளிவில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள் சகிதம் வந்த குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக வவுனியா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த தாக்குதல் யாரால், என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து இதுவரையில் கண்டறியப்பட வில்லை.

Leave a comment