66 இற்கு வராதவர்களுக்கு கட்சி தீர்மானம் எடுக்கும்- மஹிந்த

330 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்துகொள்ளத் தவறிய உறுப்பினர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து இது குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகாவலி மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment