சிறுமி மரணம் – ஹம்புத்தளையில் ஆர்ப்பாட்டம்

253 0

ஹப்புத்தளை தம்பேதன்ன தோட்டத்தில் தொழிலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது

புதுக்காடு தோட்டத்தின் சிறுமி ஒருவர் மரணமான சம்பவத்தின் பின்னணியை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

புதுக்காடு பகுதியில் இருந்து சுகவீனமடைந்த சிறுமி ஒருவரை நேற்று மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, சுற்றுலாவுக்காக வந்த இரண்டு சிற்றூந்துகள் சிறுமி அழைத்துவரப்பட்ட சிற்றூர்திகள் இடம்விடாமல் பயணித்துள்ளன.

இந்த தாமதம் காரணமாக சிறுமியை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கமுடியாமல் போனமையால், சிறுமி பாதிவழியிலேயே மரணமடைந்துள்ளார்

இந்தநிலையில் சிற்றூந்து ஒன்றை வழிமறித்த மக்கள் அதனை தம்பேதன்ன தொழிற்சாலையில் தடுத்துவைத்தனர்

எனினும் நேற்று இரவு இனந்தெரியாதோர் குறித்த சிற்றூந்தை பலாத்காரமாக எடுத்துச்சென்றுள்ளனர்

இதனையடுத்து குறித்த சம்பவத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திவருகின்றனர்.

Leave a comment