உயிரிழந்த அஞ்சல் நிலைய அதிபரின் உடலில் விசம்

274 0

எல்பிட்டிய – குருந்துகஹாஹெதெக்ம அஞசல் நிலையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் உயிரிழந்த பெண் அஞ்சல் அதிபரது சரீரத்தில் விசம் கலந்திருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவரது சரீரம் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த விடயம் தெரியவந்;துள்ளது.

இதன்படி அவர் தீ அனர்த்தத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக, விசம் அருந்தி இருக்கக்கூடும் என்று காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் அவர் தற்கொலைக்கு முயற்சித்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment