முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்வர் காலமானார்.

4785 0

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்வர் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் நேற்று காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 80 வயது.

1937ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ம் திகதி பிறந்த அவர், 1950ம் ஆண்டு இலங்கை சமசமாஜ கட்சியின் ஊடாக அரசியலை ஆரம்பித்தார்.

பின்னர் 1955ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து, நீண்டகாலமாக அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.

நாடாளுமன்ற நடவடிக்கை வேலைத்திட்டம், கிழக்கு அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

அத்துடன் முன்னைய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்தார்.

மேலும் அவர் சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும் இலக்கியப் பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment