இலங்கை நோர்வே உறவை புதுப்பிக்க உடன்பாடு

379 0

colunnamed164214547_4648042_12082016_kaa_cmy-450x188இலங்கையும் நோர்வேயும் தமக்கிடையிலான உறவை மீண்டும் புதுப்பிக்க உடன்பட்டுள்ளன.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது
அண்மையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேக்குடனான சந்திப்பின்போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நோர்வேயின் பிரதமர், இலங்கையின் ஜனாதிபதி, மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் ஆகியோருடன் நடத்திய சந்திப்பின்போது  பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன
இதன்போது,  உறவுகளை மேம்படுத்திக்கொள்ளல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை பலப்படுத்தல், கடற்தொழில்துறையில் அபிவிருத்தியை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன