மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஈரானிய பெண்

372 0

185221ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது அரசியல் வாசகம் கொண்ட பாதாகையை காண்பித்த ஈரானிய பெண், மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
கரப்பந்தாட்ட போட்டிகளை கண்டு களிப்பதற்காக வந்திருந்த பெண்ணே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானங்களில் அரசியல் வாசகங்களைக் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்துவது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெண்கள் விளையாட்டு மைதானங்களில் பிரவேசிக்க அனுமதிக்குமாறு ஈரான் அரசாங்கத்திடம் கோரும் வகையில் ஓர் பதாகை ஒன்றை குறித்த பெண் காட்சிப்படுத்தியிருந்தார்.
இதனை அவதானித்த அதிகாரிகள் குறித்த பெண்ணை ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
எவ்வாறெனினும் குறித்த பெண் வெளியேற்றப்பட்டமைக்கு மனித உரிமை அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.