இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு பதவி விலகல் 

310 0

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நேற்று தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தெரிவுக்குழு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களையடுத்தே சனத் ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழு பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பதவி விலகல் கடிதத்திற்கு அமைய எதிர்வரும் 7ஆம் திகதியுடன் தெரிவுக்குழு பதவி விலகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment