அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர்கள் இருவருக்கிடையில் வாக்குவாதம் 

311 0

அமைச்சரவை சந்திப்பின்போது அமைச்சர் அர்ஜுண ரணதுங்க மற்றும் தயாசிறி ஜயசேகரவுக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தொடர்பிலேயே குறித்த அமைச்சர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பலவீனத்தினாலேயே இலங்கை அணி தோல்வியைச் சந்திப்பதாகவும் எனவே குழு ஒன்றை நியமிக்குமாறு பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைச்சர் அர்ஜுண ரணதுங்க கொண்டுவந்த போது ‘கிரிக்கெட் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கவனத்திற்கொள்வார் என்றும், தங்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியினை சரியாக முன்னெடுக்குமாறு’ தெரிவித்துள்ளதாக அமைச்சரவை தகவல்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment