அமைச்சர் விஜயகலா தன்னைக் காப்பாற்றினார்-சுவிஸ்குமார் வாக்குமூலம்

365 0

வேலணை பிரதேசத்தில் பொதுமக்கள் தன்னைப் பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியபோது அமைச்சர் விஜயகலா தன்னைக் காப்பாற்றியதாக மாணவி வித்தியா வழக்கின் பிரதான சந்தேகநபர் மகாலிங்கம் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்யா கொலை வழக்கு விசாரணையானது ட்யர் அட்பர் முறையில் யாழ் மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,சந்தேகநபர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

‘தன்னுடைய தம்பியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது  தான் பார்க்கச் சென்றதாகவும், இதன்போது வேலணை பிரதேச பொதுமக்கள் தன்னைப் பிடித்து கட்டிவைத்து தாக்குதல் நடத்திய இடத்திற்கு வந்த அமைச்சர் விஜயகலா நீங்கள் சசியுடைய அண்ணணா? என தன்னிடம் விசாரித்து தன்னை அடிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கூறியதாகவும் சுவிஸ்குமார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

அத்துடன் 2 மணிநேரம் அமைச்சர் குறித்த இடத்திலேயே இருந்ததாகவும், பின்னர் தன்னுடைய மனைவியும், தாயும் வந்து பொதுமக்களிடம் தன்னை விடுவிக்கும்படி கெஞ்சியதாகவும் சுவிஸ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment