கொழும்பு பாதுகாப்பு மாநாடு நாளை ஆரம்பம்

209 0

கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாடு பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை காலை ஆரம்பமாகவுள்ளது.

வன்முறை மற்றும் தீவிரவாத்தை தடுக்கும் சர்வதேச போக்கு எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த முறை பாதுகாப்பு மாநாட்டில் பல உலக நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற குறித்த பாதுகாப்பு மாநாட்டில் 31 நாடுகளை சேர்ந்த 52 பாதுகாப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment