நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீரவு பெற்று தரவேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

207 0

நல்லாட்சி அரசாங்கம் கடந்த காலங்களை போன்று இழுத்தடிப்புக்களை தோற்றுவிக்காமல், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீரவு பெற்று தரவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தென்னிலங்கையிலிருக்கின்ற அடிப்படைவாதிகள் குழப்பங்களை விளைவிக்கின்றனர் என்பதை வைத்துக் கொண்டு இழுத்தடிப்பு போக்கைச் கடைப்பிடிக்கக் கூடாது.

இன்று பேரினவாத சக்திகள் மற்றும் அடிப்படைவாதிகள், சிறுபான்மை மக்களை மோதவிட்டு அதன்மூலம் குளிர்காய்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடத்துடன் தொடர்புடையவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டிய அவசியமும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் ஞானமுத்து ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment