கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதி

196 0

தம்புள்ளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தொழில் புரியும் குறித்த பெண் நேற்று இரவு நபரொருவரால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

இருவருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Leave a comment