இந்திய மீனவர்களின்  அத்துமீறலை தடுக்க புதிய வியூகம் – ட்ரவிஸ் சின்னையா

190 0
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்கு புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா இதனதை; தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக் குறித்த தெளிவில்லாமல் அத்துமீறி பிரவேசிக்கின்றனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இலங்கை இந்திய கடல் எல்லையை அடையாளப்படுத்தி அதனை அவர்கள் மீறும் போது எச்சரிக்கை சமிஞ்சையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகளுக்காக புதிய இயந்திர படகுகளை இலங்கை கடற்படையுடன் இணைக்கவுள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.

Leave a comment