எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ – பௌசரின் சாரதியும் உதவியாளரும் கைது

239 0
நிட்டம்புவ – கலகேடிஹேன்ன பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் தொடர்பில் பௌசர் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் கம்பஹா நீதிமன்றில் முன்னிலைச் செய்யப்படவுள்ளதாக கம்பஹா காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களின் கவனகுறைவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ – கலகேடிஹேன்ன பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டது.
அது சுமார் 2 அணி நேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டது.
எனினும் சேத விபரங்கள் குறித்து இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.

Leave a comment