ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – தாமும் காரணம் அமைச்சர் எஸ்.பி

215 0

அமைச்சர் ராஜித சேனரத்னவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தாமும் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.

தாம் உயர் கல்வி அமைச்சராக இருந்த போதே சைட்டம் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப்பட்டதாகவும், அதற்கான மருத்துவ மனையை அமைப்பதற்கும் தாமே உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தம்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே விஜயதாச ராஜபக்ச ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தை கையில் எடுத்ததாக எஸ்.பீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்

Leave a comment