அபாயகரமான சரக்குகளை கண்காணிக்க அமெரிக்க தூதரகத்தினால் பயிற்சிகள்

189 0

இலங்கை சுங்கவரித்துறைக்கு அபாயகரமான சரக்குகளை கண்காணிப்பது தொடர்பான விசேட பயிற்சி முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க தூதரகத்தினால் இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சிகள் கடந்த 21 ஆம் திகதி முதல் இன்று வரை இடம்பெற்றன.

இந்த பயிற்சகளில் பங்குபற்றியவர்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த பரிமாற்றப் பண்டங்களை கண்டறிதல் மற்றும் ஆவண ஆய்வு செய்தல் மூலம் சந்தேகமான சரக்குகளை குறித்து நோக்கும் முறைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டது.

சரக்குகளை கண்காணித்து ஆய்வு செய்ய வரையறுக்கப்பட்ட வலங்களே உள்ள நிiலையில், ஆபத்தாக கருதப்படும் சரக்குகளை உறுதி செய்வது குறித்தும் இதன்போது பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment