இலங்கை இராணுவத்தின் களப்பயிற்சியில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் பங்கேற்பு

216 0

இலங்கையின் இராணுவம் ஏற்பாடு செய்திருந்த இராணுவ களப்பயிற்சி நடவடிக்கைகளில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டின் கிழக்கு பிரதேசத்தில் இந்த பயிற்சிகள் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இந்த பயிற்சிகளில் 62 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உட்படஇலங்கையின் 2 ஆயிரத்து 675 முப்படை வீர்களும் பங்குகொள்ளவுள்ளனர்.

அதேநேரம் பயிற்சிகளில் கண்காணிப்பாளர்களாக அமெரிக்கா , இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா உட்பட்ட நாடுகளின் படை அதிகாரிகள் பங்கேற்றவுள்ளனர்.

 

Leave a comment