ஒன்று அல்ல 10 வந்தாலும் தோற்கடிப்பேன்- அமைச்சர் ராஜித

265 0

நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் ஒன்று அல்ல, 10 கொண்டு வந்தாலும் கொலைகாரர்கள், மோசடிக் காரர்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லையென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினூடாக இன்று (24) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித ஆதாரமும் இல்லாத அங்கும் இங்கும் சேர்த்துக் கொண்டு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், கூட்டு எதிர்க் கட்சியின் வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்டுவதாகவும் அமைச்சர் அவ்வறிவித்தலில் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்களின் அறிவீனமான நடவடிக்கையின் விளைவே இதுபோன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகும். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தான் வெற்றி கொள்வதாகவும், இறுதியில் தன் மீதான நம்பிக்கை தெரியவரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment