வாக்கெடுப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பம்

365 0

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்துக்கு நாளை (25) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (24) தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு நாளை காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்சட்ட மூலம் தொடர்பிலான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment