ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்த கையொப்பமிடவில்லை

237 0

கூட்டு எதிர்க்கட்சியினரால் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை 39 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், முன்னாள் ஜனாதிபதி தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பம் இடவில்லை.

அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதியை விட குறைந்த விலையில் மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment