சசிகலாவை தொடர்ந்து விமர்சித்தால் தமிழக முதலமைச்சர் எடப்பாடியின் ஆட்சி கவிழ்வதை எவராலும் தடுக்க முடியாது என கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் “காலை 10 மணி முதல் 2 மணிவரை எடப்பாடியும், பகல் 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் பன்னீர் செல்வமும் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் யாரையும் விமர்சிக்காத சசிகலாவை தொடர்ந்து விமர்சித்து வருவது நியாயமானதில்லை.
ஆட்சியைவிட கட்சியே எங்களுக்கு முக்கியமானது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.