களுதாவளையில் காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி(காணொளி)

318 0

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் மஞ்சல் கோட்டுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, அந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்ததில் எதிரே வந்த தனியார் பேருந்து குறித்த மோட்டார் சைக்கிளுக்கு மேலால் ஏறியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த களுதாவளை முருகன் ஆலய வீதியை சேர்ந்த 24 வயதுடைய ம.இதயராஜ் என்பவரை களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் தனியார் பேரூந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பேரூந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்,
சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment